






பிரயாகை-மகா கும்பமேளா
சமுத்திர மந்தனுக்கு , கும்ப கலசத்திலிருந்து அமிர்த துளிகள் முதன்முதலாக ப்ரயாக் க்ஷேத்திரத்திற்கு கிடைத்தது பகவானின் விராட் ஸ்வரூபத்தை லக்ஷ்யமாகக் கொண்டு, உலக நலத்திற்காக கும்ப கலச பூஜை செய்யப்படுகிறது. பகவான் விஷ்ணு இதை தாங்கி காப்பாற்றுகிறார். அனைத்து தேவதைகளும், புண்ய தீர்த்தங்களும் கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்கள்.
பன்னிரண்டு நாட்கள் போர் நடைபெற்றதால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கூறிய ஷேத்திரங்களில் கும்பமேளா நடைபெறுகிறது ( தேவர்களின் ஒரு நாள் மனிதர்களுக்கு ஒரு வருஷம் ) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிருஹஸ்பதி வ்ருஷப ராசியிலும், ஸூர்யன் மகர ராசியிலும் ஸஞ்சரிக்கும் சமயம் ப்ரயாகில் மகாகும்பமேளா அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தப் புனித சமயத்தில் லக்ஷக்கணக்கான ஆன்மீக, ஆஸ்தீக மக்கள் இங்கு புனித ஸ்நானம் செய்ய வருகிறார்கள். மகாகும்பமேளா பர்வத்தில் வடநாட்டின் பல மடங்களின் ஜகத்குருக்கள், சன்யாசிகள் இங்கு ஒரு மாத காலம் முகாம் அமைத்து கல்ப வாசம் அனுஷ்டிக்கிறார்கள். ஒவ்வொரு முகாமிலும் அது சமயம் அகண்ட பாராயணம் ஸ்ரீமத் பாகவதம் முதலிய புராணங்கள்; பஜனைகள், ப்ரவசனங்கள், ஹோமம் ஆகியவைகள் உலக சாந்திக்காக நடை பெறுகின்றன.
உத்தர பிரதேச சர்க்கார் மூலம் அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்படுகிறது.
அது சமயம் அங்கு வரும் தங்களின் சிஷ்யர்களுக்கும், அவர்கள் எல்லா வசதிகளும், தங்க இடம், போஜனம் ஆகியவை அளிக்கிறார்கள். முக்கிய ஸ்நான தினங்களில் ஸன்யாசி முதலியோர் சங்கமத்தில் புனித ஸ்நானம் செய்த பிறகு யாத்ரீகர்கள் புனித ஸ்நானம் செய்கிறார்கள்.
கும்பமேளா சமயம் பெருமளவில் யாத்ரீகர்கள் இங்கு விஜயம் செய்கிறார்கள். சிலர் ஒரு மாத காலம் கங்கையமுனையின் மத்திய பாகம் கல்பவாசம் செய்கிறார்கள். கல்பவாசம் பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது.
பிரயாக் பாரதீய பண்பாட்டையும் ஆன்மீகத்தையும் வளர்க்கும் சிறந்த புண்ணியதீர்த்தமாக விளங்குகிறது. இங்கு மக்கள் புனித நீராடி ஆத்மோன்னதி அடைகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக