Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

திங்கள், 12 அக்டோபர், 2009


காஞ்சி சங்கர மடம்

காஞ்சி சங்கர மடம் அனுமான் காட் பகுதியில் காஞ்சி சங்கர மடம் உள்ளது. தமிழ்ர்கள் நிறைந்த பகுதி. தமிழ் அய்யர் அதிகம் வசிக்கும் பகுதி

காசி யாத்திரை வருபவர்கள் தங்குவதற்க்காக மடத்தில் அறைகள் கட்டியுள்ளார்கள் குடும்பத்தாரோடு தங்குவதற்கு செளகர்யமாக கட்டப்பட்டுள்ளது. காசி ரயில் நிலையத்திலிருந்து நேராக சங்கர மடம் சென்று தங்கினோம்

அணைத்து வசதிகளுடன் ஆச்சர்யாள் மடத்திலேயே தங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஸ்ரீ சங்கர மடத்தின் முகவரி

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சர்யா சுவாமிகளின் மடம் மேனேஜர் V S சுப்ரமணியம் B.4/7 New #4/22 ஹனுமான் காட் வாரனாசி 221001

போன் 0542-2277915-2276932-2277758-09335960320-09415228721

E mail chandravns@dataone.in & kanchimuttvaranasi@gmail.com

நமது பரமாச்சரியார் பரிவாரங்களுடன் ஊர் ஊராகச் சென்ற வண்ணம் 1922-ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தை அடைந்து வழிபாடுசெய்து அங்கிருந்து கடல் மணலை எடுத்துக்கொண்டார். இம்மணலை அவர்செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்று பூஜையில் வைத்திருந்து பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து 1934-ஆம் ஆண்டு பிரயாகையில் கங்கையில் கரைத்துவிட்டார்.

மடத்தில் நடை பெரும் நித்ய பூஜைகளிலும் கலந்து ஆசி பெறலாம் காசி காஞ்சி சங்கர மடத்தில் வேத பாடசாலை நடை பெறுகிறது, சங்கர மடத்திலிருந்து ஐந்நூறு அடியிலேயே கங்கை ஆறு ஓடுகிறது ஒரு சிறிய வலைவுதான் ஆறு வந்து விடுகிறது. சங்கரமடத்தில் சிவன் சாரதாம்பாள் ஆதி சங்கரருக்கு ஆராதனை செய்யப்படுகிறது, கண்டு ரசித்தோம். மடத்தில் உள்ள சந்நிதியில் தியானம் செய்வதற்கு அமைதியாகவும் சாந்நித்தியமகவும் உள்ளது.

ஸ்ரீ ஆதி சங்கரர் காசியில் விஸ்வநாத அஷ்டகம், அன்னபூரணி அஷ்டகம், மணிகர்ணிகா அஷ்டகம் பாடியுள்ளார். காசி தீர்த்தத்திற்கு வந்து பிரம்ம, ஸூத்திரத்திர்க்கு பாஷ்யம் எழுதி ஸ்ரீ வியாச பகவானால் பாராட்டப்பட்டு அவரது நல்லாசியுடன் மற்றுமொருமுறை பதினாறு வயது அதிகம் பெற்று ஸ்ரீ ஆதி சங்கரர் அங்கிருந்து தமது பாரத விஜய த்தை தொடங்கினார்.

காசியம்பதியில் கங்கைக்கரையில் ஸ்ரீ சங்கர் பகவத் பாதர் உபதேசம் பல வேறு தெய்வங்களும் ஒரே கடவுள் எடுத்துக்கொள்ளும் பல வடிவங்கள் தான் என்பதை மறந்து அவரவரும் தான் வழிபடுகிற தெய்வமே மற்ற தெய்வங்களை விட உயர்ந்தது என்று வாதப்போர் செய்து வந்தனர். இது போதாது என்று அன்பே வடிவான கடவுளின் உக்கிர ரூபங்களை பலர் வழி பட்டு அதற்க்காக தாங்களும் மிகப் பயங்கரமான வழிபாட்டு முறைகளை மேற்கொண்டனர்.

கர்ம ஞான வழிகளை செம்மை செய்த சங்கரர் அன்பு மயமான ஆண்டவன் வழிபாட்டில் புகுந்துவிட்ட அச்சமூட்டுகிற அருவருப்பூட்டுகின்ற அம்சங்களை விளக்கி நாட்டில் அமைதிக்காக சஞ்சரித்தார்.

ஹனுமான் காட்

ஹனுமான் கட்டத்தை ஒட்டி கங்கை படித்துறை. இங்கு தான் அனுமார் ராமேஸ்வரத்திலிருந்து வந்து சிவலிங்கம் எடுத்து சென்றார்.

அனுமார் கோவில் சக்தியுள்ள வரப்ரசாதி என்பதனால் கேட்பவருக்கு கேட்டவரம் அருளும் வல்லமை கொண்டவர். இவரது பெயரால் இத்துறைக்கு அனுமன் கட்டம் என்ற பெயர் உள்ளது. செந்தூரம் பூசிய திருமேனியுடன் வலக்கையை உயர்த்தி இடக்கையை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறார்.



கருத்துகள் இல்லை: