Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

திங்கள், 2 நவம்பர், 2009

பிரயாகை (அலகாபாத்) ஷேத்திர மகிமை

பிரயாகை (அலகாபாத்) ஷேத்திர மகிமை

பிரயாகையை ஸ்தாபித்து ஆரியர்கள் என அழைக்கப்படும் பிராமணர்கள் வாழ்ந்த பகுதி பிரயாகை. "prayagasya praveshshu papam Nashwati Tatkshanam." ப்ரயகச்ய பிரவேஷ்ஷு பாபம் நஷ்வடி த்க்ஸ்ஹநம் .".

சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்த அந்தணர்ககளின் சந்ததியினர், தங்களது மூதாதையர்களின் கொள்கைகளை பரப்புவதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வாழ்கிறார்கள். ஒன்பதனாயிரம் ஆண்டுகளாக பிராமணர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருவதை சரஸ்வதி நதி உறுதிப்படுத்துகிறது. வேத காலத்தில் கங்கை யமுனைக்கு மேற்க்கே ஓடிய நதி சரஸ்வதி நதி தற்போது வரண்டுள்ளது ஆயினும் 4000 ஆண்டுகளுக்கு முன்பு கம்பீரமாக ஓடிய நதி சரஸ்வதி நதி.

பிரயாகையிலிருந்து காசி 125 km தொலைவில் உள்ளது

முதலில் பிரயாகை அடுத்து காசி மூன்றாவதாக கயாவிற்க்கு வந்து சிராத்தம் முடிக்கவேண்டும் காரணம் என்னவென்றால் இல்லங்களில் மூதாதையருக்கு திதி கொடுக்கும்போது அட்சய வடம் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது.அகரம் மத்யம் மூலம் என்றும் கூறப்படுகிறது. அட்சயவடம் என்ற ஆலமரம் கயாவில் காணப்படுறது. இந்த ஆலமரத்தின் மூல வேர் பிரயாகையில் இருக்கிறது. நடுப்பாகம் மத்யம் காசியில் உள்ளது. நுனிப்பாகம் அகரம் கயாவில் உள்ளது. இந்த மூன்று ஸ்தலங்களையும் இந்த ஆலமரம் இணைத்து வைக்கிறது.

பெரு வேள்வி கண்ட பூமியே பிரயாகை, தீர்த்த ஸ்தலத்தில், முக்கியமாக உபவாசம், ஜபம், தானம், பூஜை, பாராயணம் முதலியவை அனுஷ்டிக்கப்படுகின்றன.

கங்கை, யமுனை, ஸரஸ்வதீ ஆகிய மூன்று புனித நதிகளின் த்ரிவேணீ சங்கமத்தில் ஸ்நானம் செய்கிறவர்கள் பிரஹ்ம பதத்தை அடைகின்றனர்.

கருத்துகள் இல்லை: