இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு & விஷு நல்வாழ்த்துக்கள்
வரவேற்போம்
கேரளத்தில் விஷுக் கனி காணல் என்று கொண்டாடுகின்றனர் சித்திரை வருஷபிறப்பிர்க்கு முதல் நாள் ஒவ்வொருவரும் பூஜை அறையில் இரவில் ஒரு தட்டில் பொன் வெள்ளி ரூபாய் நோட்டுக்கள் நாணயங்கள் புஷ்பம் தேங்காய் கண்ணாடி கிடைக்கும் பழங்கள் முதலியவற்றை வைத்து வருஷப் பிறப்பன்று காலையில் துயில் எழுந்ததும் கண்களை திறக்காமல் பூஜை அறைக்குள் சென்று தட்டில் வைத்திருக்கும் பொருட்களை பார்த்த பின்னர் கண்ணாடியில் தங்கள் முகத்தை பார்த்து பின்னர் ஸ்வாமி படத்தை நமஸ்கரித்து வீட்டிலுள்ள பெரியோர்களை நமஸ்கரித்து ஆசி பெறும்போது பணம் கொடுப்பார்கள்.தமிழ் நாட்டிலும் பெரும்பான்மையாக கொண்டாடுகிறார்கள்
புத்தாண்டு தினத்தன்று வீட்டு வாசலில் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி வீட்டை அலங்கரித்து ஸ்வாமியை நமஸ்கரித்து பூஜைகள் செய்து பலவிதமான தின்பண்டங்களுடன் மாங்காய் வெல்லம் வேப்பம்பூ சேர்த்து பச்சடி செய்து நாம் உண்கிறோம் இந்த இனிப்பு புளிப்பு கசப்பு கலவையானது நமது வாழ்வின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள ஒரு ஊக்கசக்தியாகும்.
இவ் வருஷத்தில் உங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க்கையில் வென்று மேன்மேலும் வளர்ந்து மட்டற்ற மகிழ்ச்சியையும் சேர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்தையும் நீங்காத புகழையும் தினமும் பெறவும் புதிய வருஷத்தில் புதிய சக்தியுடன் புதிய எண்ணங்களோடு புதிய சாதனைகளை நீங்கள் சாதிக்கவும் நீங்கள் நினைப்பவை கைகூடி வரவும் ஒரு வளமான வாழ்க்கை இந்த ஆண்டில் துவக்கவும் என்றும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களுடன்
LIC சுந்தரமூர்த்தி குடும்பத்தினர்
www.salemscooby.blogspot.com
வேப்பம் பூ பச்சடி செய்முறை (நினைவூட்ட)
தேவையான அளவு வேப்பம்பூ மாங்காய்-வெல்லம் –-உப்பு-மிளகாய் கடுகு
மாங்காய் பச்சை மிளகாய் இரண்டையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் வேப்பம்பூவை கடாயில்போட்டு கரகரவென வறுத்துக் கொண்டு வெல்லத்தை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்
மாங்காயை நீரில் வேக வைத்து வதக்கிய பச்சை மிளகாயையும் வெல்லக் கரைசலையும் மாங்காயுடன் சேர்த்து கலக்கி அடுப்பில் வைத்து சூடாக்கவும் உப்பு சேர்த்து கொதித்தவுடன் இறக்கி வைத்து கரகரவென வறுத்து வைத்த வேப்பம்பூவை சேர்த்து இறக்கி கடுகு தாளிக்கவும் தேவையெனில் தயிர் சேர்த்துக்கொள்ளலாம்.
LIC சுந்தரமூர்த்தி குடும்பத்தினர்
www.salemscooby.blogspot.com