Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

காசி விஸ்வேஸ்வர்

காசி கோவில் உள்ளே சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். சதுரமான சிறிய அறையின் நடுவில் சிவன் தரைத்தளத்தில் உள்ளார். நீள் சதுரமான ஒரு வெள்ளி தொட்டிலில் அமர்ந்து ஆசீர்வதிக்கிறார். காசி விஸ்வநாதர் சன்னதி விமானம் தங்ககூரை வேயப்பட்டு ஜொலிக்கிறது. வாயில் கதவுகள் வெள்ளி கவசத்தால் செய்யப்பட்டுள்ளது.

சிவலிங்கத்திற்கு மேற்புரமிருந்து கங்கை நீர் சிறிது சிறுதாக சிவலிங்கம் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. தரையில் கைக்கெட்டும் தூரத்தில் விஸ்வநாதர் இருப்பதால் அனைவரும் தொட்டு நமஸ்கரிப்பதுடன் தங்கள் கரங்களாலேயே கங்கா தீர்த்தம், பால், தேன் , வில்வம், தயிர், விபூதி, ருத்திராட்சங்கள் என அவரவர்கள் சாஸ்திரப்படி, வழ்க்கப்படி, அபிஷேகம் செய்து லிங்கத்தை சுற்றி ஆராதிக்கின்ற காட்சியை காணலாம்.

பிரசாதம் பெறலாம். பூஜை நடை பெறும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும் வேத பாராயணங்களும் மேளதாளங்களின் இன்னிசையும் கோவிலின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் போது கேட்டு அடையும் மனநிம்மதி, மகிழ்ச்சிக்கு அளவில்லை. சப்தரிஷி பூஜை நடைபெறும்போது சாமவேத கோஷம் எங்கும் கேட்கிறது ஐந்து தலையுள்ள நாகாபரணம் லிங்கத்தின் மீது சூட்டப்பட்டு பூஜை ஆரத்தி நடை பெறுகிறது. பூஜை மிகவும் நேர்த்தியாக ஒரு மணி நேரம் நடைபெறுகிறது.

விஸ்வநாதர் சன்னதியில் மதம் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் தொழுகின்றனர்.

உமாபதியான பரமேஸ்வரரின் லிங்கம் காலையில் தரிசிப்பதால் ஸ்வர்க்கத்தை நல்குவதாகும், நடுப்பகலில் தரிசித்தால் அஸ்வமேத பயனையும், மாலையில் தரிசித்தால் மோஷ்த்தையும் கொடுக்கும். சூரியன் மறையும் அந்தப் பிரதோஷ வேளையில் பஞ்சாஷரம் சொல்லி பரமேஸ்வரனை ஆராதித்தால் முக்காலத்திலும் சமமாக விரும்பிய பயனை திண்ணமாக அடையலாம்.

தசாச்வேமேத நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு காசி விஸ்வநாதர் சன்னந்திக்கு செல்கிறது கங்கையில் ஸ்நானம் செய்த பிறகு விஸ்வநாதரை தரிசித்தோம்

தினசரி ஆயிரக்கணக்கில் யாத்ரீகர்கள் வருகை புரிந்தாலும் அமாவாசை, பிரதோஷம் மற்றும் விழாக்காலங்களில் லட்சக் கணக்கில் கூடுகின்றனர்.

நாங்கள் காசிக்கு சென்ற பொழுது ஆடி அமாவாசையாக இருந்ததால் இரண்டரை லட்சம் யாத்ரீகர்கள் வருகை புரிந்ததாக கூறினார்கள் நாங்களும் வழி நெடுக யாத்ரீகர்கள் பால் காவடி எடுத்து காவி நிற வேஷ்டி அணிந்து நீண்ட நாட்கள் விரதத்துடன் வந்திருந்ததை கண்கூடாக பார்த்தோம்

எங்களுக்கு அமாவாசை நேரத்தில் விஸ்வநாதரை தரிசிக்க முடியுமா என்ற சந்தேகம் தோன்றி பயமாகவும் இருந்தது ஆனால் விடிகாலை 5 மணி தரிசனம் திருப்தியாக செய்தபோது கும்பல் குறைவாகவும் அனைவரும் இரவு முழுவதும் பூஜையில் கலந்து இறைவனை தரிசித்து சென்றுள்ளனர் என்பதையும் அறிந்தோம் .

தமிழக மக்களிடம் உயிர் பிரியும் முன் கங்கை நீரை நாவில் இறுதியாக விட்டு சிவஸ்துதி கூறி மோட்சத்திற்கு அனுப்புவது வழக்கம்.தமிழ் நாட்டில் காசி விஸ்வநாதர் சந்நதி பெரும்பாலும் எல்லா சிவாலயங்களிலும் காணப்படுகிறது.

தீபாவளியை ஒட்டி காசி விஸ்வநாதரை மனதார வணங்கி அவரது நல அருள் பெறுவோம். தீபாவளியன்று நாம் மற்றவரை கேட்கும் முதல் கேள்வியே கங்கா ஸ்நானம் ஆச்சா?..

காசியில் தரிசிக்கவேண்டிய முக்கிய ஆலயங்கள்

துண்டி விநாயகர்- விஸ்வநாதர்-அன்னபூரணி-விசாலாஷி-துர்கை-சோழி அம்மன்- வராகி அம்மன்- பைரவர்

கருத்துகள் இல்லை: