Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

திங்கள், 2 நவம்பர், 2009

கணேசன் உஷா தம்பதிகள் வேநிதானம் செய்யும் காட்சி

வேணீதானம்: (கூந்தல் தானம்)

சுமங்கலி ஸ்திரீகள் வேணீ தானம் செய்கிறார்கள். சுமங்கலி ஸ்திரீகள் முதலில் தங்கள் கணவனுடன் திரிவேணீ கரையில் இதற்காகச் சங்கல்பம் செய்துகொண்ட உடன், மஞ்சள் பூசிக்கொண்டு ஸ்நானம் செய்தபின், கரையில் வந்து கணவனிடம் கூந்தல் தானம் செய்ய அனுமதி பெறுகிறாள். மனைவி கணவனை மாதவனாகக் கருதி வாழ்நாளில் தான் செய்யும் கடமைகளில் தான் செய்திருக்கக் கூடிய சிறு தவறுகளுக்கு மன்னிக்குமாறு வேண்டுகிறாள். இந்த இனிய கருத்துப் பரிமாரலில் தாம்பத்யம் புதிய பலத்தை பெறுகிறது. ஸ்நானம் செய்யும் சமயம், முடியைக் கட்டி முடித்து இருக்க வேண்டும்..வேறு எந்த ஷேத்திரதிலும் பெண்கள் தங்கள் கேசத்தை மழிப்பதோ கழிப்பதோ இல்லை த்ரிவேநிக்கு மட்டும் விதி விலக்கு.

கணவன் வேணீ தானத்திற்கான அனுமதி கொடுத்து, முடியின் நுனியில் மங்கள திரவியங்களைக் கட்டி, கணவன் மனைவிக்கு மூன்று கால் எடுத்துப் பின்னிவிட வேண்டும் பிறகு த்ரிவேநியையும் கத்திரிகோல்யும் பூஜிக்க வேண்டும் கத்திரிகோல் கூட ஒரு வகையில் த்ரிவேநிதான். கத்திரிகோல்ளின் இரு பகுதிகளாக கங்கையும் யமுனையும் இருக்கிறார்கள் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் ஆணி தான் சரஸ்வதி. முடியின் நுனியைக் கத்திரிக்கோலால் வெட்டி எடுத்து மனைவியின் கையில் கொடுக்கிறான். மனைவி இதை வழி பாட்டுக்குப்பின் பின்னலை முறத்தில் வைத்து வேநிதானம் செய்யவேண்டும். ஒரு சிறிய முறத்தில் சீப்பு, கண்ணாடி, குங்குமம், மஞ்சள், அரிசி, வெற்றிலை, பாக்கு, பழம் ரவிக்கை துணி, தட்சினை இவற்றை வைத்து மேலே ஒரு சிறிய முறத்தால் மூடி தானம் செய்து விட்டு தம்பதியர் இருவரும் நீராடி வரவேண்டும். திரிவேணிக்கு அர்ப்பணிக்கப்படும் அந்தக் கூந்தல் நீரில் மிதப்பதில்லை விர்ரென்று நீருக்குள் மூழ்கி மறைந்து விடுகிறது.


கருத்துகள் இல்லை: