Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

அன்னபூரணி கோவில்

விஸ்வநாதர் சன்னதிக்கு அருகாமையில் உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது மூன்று நாட்கள் மட்டும் தங்கத்திருமேநியாளின் பொற்சிலை பக்தர்கள் தரிசனத்திற்க்காக திறக்கப்படுகிறது பிறகு திரை போட்டு விடுகிறார்கள்.

பக்தர்கள் அனைவரும் பசி, பட்டினி இன்றி அன்னபூர்ணா தேவி அருள் பாலிக்கிறாள். ஆதி சங்கரர் அன்னபூர்ணா அஷ்டகத்தில் அன்னையின் மகிமையையும் சக்தியையும் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் வர்ணிக்கிறார் நமக்காகப் பிட்ஷை கேட்கிறார்.

ஜகன்மாதா அன்னபூர்ணிஸ்வரி பரிபூரண பிரகாசத்துடன் ஜகன்ஜோதியாக காட்சி தருகிறாள். தலையில் மணிமகுடம், மார்பிலும் கரங்களிலும் மின்னும் மணியாரங்கள், நவரத்தினங்களும், வைடூரியங்களும், மரகத பவழ,கோமேதக, மாணிக்கங்கள் டால் அடிக்கின்றன. பொன் நகைகள் பூண்ட பராசக்தி புன்னகையால் அருள் பாலிக்கிறாள்

இடக்கரத்தில் தங்கக்கிண்ணம், வலக்கையில் தங்கக்கரன்டி கொண்டு அன்புருவாக உணவு போடும் அன்னபூரணி ஞானத்தை விசேஷமாக அனுக்கிரகிக்கிறாள். எதிரில் திருவோடு ஏந்தி நிற்கும் விஸ்வேஸ்வரருக்கு அன்னமிடுகிறாள். ஸ்ரீதேவியும் பூதேவியும் இருபுறமும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களும் வலக் கரங்ககளை உயர்த்தி நம்மை ஆசீர்வதிக்கிறார்கள். அவையும் தங்கப் பதுமைகளே.

எங்கள் செல்வம் பெருக வேண்டும், நல்வாழ்வு மலர வேண்டும் என்று மனமுருக பிரார்த்தனை செய்தோம். அன்னபூர்ன தேவி எதிரில் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரமேரு யந்திரம் தர்சிக்க முக்கியமானது.

கருத்துகள் இல்லை: