Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

சனி, 11 ஜூன், 2011

தனித்தன்மை வாய்ந்த அடையாள எண்


AADHAAR அடையாள எண் வாங்கி விட்டீர்களா?இல்லையெனில் உடனே வாங்கவும் விபரம் கீழே:ஏனென்றால் நான் கோடியில் ஒருவன்.நீங்கள் ? 




இந்திய அரசு அளிக்கும் இந்திய தனித்தன்மை அடையாள அதிகார அமைப்பு எண்AADHAAR அடையாள எண் வாங்கி விட்டீர்களா?இல்லையெனில் உடனே வாங்கவும் விபரம் கீழே:ஏனென்றால் நான் கோடியில் ஒருவன்.நீங்கள் ? 
இதுவரை  ஒரு கோடிக்கு மேலானவர்கள் பதிவு செய்து பயன் பெற்றுள்ளனர் தாங்களும் இதில் ஒருவரா இல்லையென்றால் உடனடியாக பதிவு செய்யவும்.அடையாள எண் பெற்றவர்களில் இதுவரை  குறிப்பிடத்தக்கவர்கள் 13 நாள் குழந்தை முதல் 103  வயது கடந்த  இளைய முதியவர் வரை அடக்கம்.
ஆதார் எண்பது 12  இலக்கம் கொண்ட தனித்தன்மை வாய்ந்த அடையாள எண் .இது இந்தியாவில் வசிக்கும் அணைத்து தனி நபர்களுக்கும் கிடைக்கும்.இதன் மூலம் நபரின் அடையாளம் இருப்பிடம் இருப்பதால் இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும் நமக்கும் பாதுகாப்பு.  
வங்கியில் கணக்கு ஆரம்பித்து சேமிக்க மத்திய மாநில அரசுகள் அளிக்கும் உதவித்தொகை ATM கார்டு மூலம் நடுவில் இடைத்தரகர் இல்லாமல் தொகை பெற, இன்ஸ்யூரன்ஸ் தொகை செலுத்த, பெற, பென்ஷன் தொகை பெற, மற்றும் அனைத்துவிதமான மத்திய மாநில அரசுகளின் சலுகைகளை பெற உதவிகரமாக இருக்கும். மற்றவர்களுக்கு இருப்பிட சான்றிதழ்-அடையாள சான்றிதழ்-போட்டோ ஒட்டிய அடையாள சான்றிதழ் என்று அதிக ஆவணங்கள் இல்லாமல் இது ஒன்றே போதுமானது பல அடையாள அட்டை வைத்துக் கொள்வதை தவிர்க்கலாம் 
இந்திய அரசின் அதிகாரபூர்வமான இருப்பிட அடையாள எண் கொண்டது இது ஒன்று தான் தற்போது KYC Know your customer க்கு மாற்றாக KYR know your resident என்று அழைக்கப்படும் இந்த எண் மூலம் நமது மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களிலும் உபயோகப்படுத்தலாம்.    இந்த இருப்பிட சான்றிதழ் அனைத்து விதமான சேவைகளும் பெற உதவியாக இருக்கும் மாநில மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அளிக்கலாம்.
 தனித்தன்மை வாய்ந்த அடையாலமுள்ள 12 இலக்க எண் கொண்டது தங்களது இருப்பிட அடையாளங்கள் சொத்து விபரங்கள் ஆகிய சுய விபரங்களுடன் கூடிய இந்த சான்றிதழ் மூலம் தாங்கள் சேவை பெரும் நிறுவனங்களை திருப்தி படுத்தலாம் பிற அடையாள அட்டைகளில் நடைபெறும் மோசடிகளை தடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது
இந்த திட்டத்தை அரசுடன் சேர்ந்து செயல் படுத்துவோர் LIC ஆயுள் காப்பீட்டு நிறுவனம்-தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்-பொதுத்துறை நிறுவனங்கள்-  
தேவைப்படும் ஆவணங்கள் தரமுடியாமல் நிறைய நபர்கள் இருப்பதால் அவர்களும் பயன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உதாரணமாக நாடோடிகள் பிச்சைக்காரர்கள் குடிசை வாசிகள் போன்ற நிரந்தர குடியிருப்பு இல்ல்லாதவர்களும் பெறலாம்
அறிமுகத்தின் பேரில் இவர்களும் அடையாள எண் பெறலாம்
அறிமுகப்ப்படுத்துவோர் யார் :?அரசு அதிகாரிகள்-பள்ளி உபாத்தியாயார்கள் தலைமை ஆசிரியர்கள்-அங்கன்வாடி பணியாளர்கள்- ஏற்க்கனவே ஆதார் அட்டைபெற்றவர்கள் போன்ற அனைவரும் அறிமுகம் செய்து உதவலாம்,-
அடையாள எண் பெற எளிமையான நடைமுறை

அதிகாரபூர்வமான அடையாள அட்டை வழங்கும் இடத்தில் தரப்படும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் KYC எனப்படும் நாம் ஏற்க்கனவே உபயோகப் படுத்தும் ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள  அட்டை பாஸ்போர்ட் டிரைவிங் லைசன்ஸ் ஏதேனும் ஒரு ஆவணத்தை இனைத்தால் போதுமானது 
பெயர் –தகப்பனார் பெயர் /தாயார் பெயர் –திருமணமானவரா-துணை பெயர்-விலாசம் போன் எண் சொத்து விபரங்கள் வீடு –நிலம் –சில சேவை நிறுவனங்கள் தேவை இல்லாமல் இது போல கேட்கிறார்கள் 
வருடாந்திர வருமானம் தன்னை சார்ந்திருப்பவர்கள் எண்ணிக்கை பிறந்த தேதி  ஒரு நாமினியை நியமிக்கலாம் மேற்க்கண்ட படிவத்தில் மூன்று கையொப்பம் இட்டு படிவம் பூர்த்தி செய்து கொடுத்தவுடன் உடனடியாக
1) நமது  முகம் தெரியுமாறு போட்டோ ஒன்று எடுக்கப்படும்
2)                             பத்து விரல் ரேகை பதிவு செய்யப்படும்
3) இரு கண்ணின் கருவிழி கேமிரா மூலம் படமெடுக்கப்படும்
கை விரல் ரேகையும்-கண்விழியும் ஒருவர் போல் யாருக்கும் அமையாது என்பதால் இந்த பாதுகாப்பான ஏற்ப்பாடு














            மேற்க்கண்டநடைமுறைபதினைந்து நிமிடத்தில் முடிந்தவுடனேயே



கம்ப்யூட்டர் திரையில் நாம் தெரிவித்தது அனைத்தும் பதிவாகியுள்ளதா என்பதை நாம் உறுதிப்படுத்தியவுடன் ஒப்புகை சீட்டு வழங்கப்படும் ஒரு மாதத்திற்குள் அடையாள எண் அரசினரால் வழங்கப்படும்
தகவல் அளித்த போது உள்ள தகவல்கள் அனைத்தும் இரகசியம் காக்கப்பட்டு இந்திய அரசின் காப்பகத்தில் பத்திரமாக இருக்கும் அரசு  நிறுவனங்கள் எந்த நேரத்திலும் இந்தியாவில்  எங்கிருந்து  விசாரிக்கும் போதும்  தகவல் சரி அல்லது தவறு என்று மட்டும் தான் அவர்களுக்கு பதில் கிடைக்கும் ஆதலால் உண்மையான தகவல்களையே கூறவும்.
கீழ் கண்ட வலை தளத்திலும் சென்று நமது தனித்தன்மை எண் பற்றிய நிலைமையை அறிந்து கொள்ளலாம் www.uidai.gov.in சந்தேகங்களுக்கு 1800 180 1947 எண்ணில் அறியலாம்
அறியாதது: விலாச மாறுதல் இருப்பின் யாரை அணுகி மாற்றம் செய்து கொள்வது ?
licsundaramurthy@gmail.com
04.08.2011




சனி, 28 மே, 2011

இலவசம் BE படிப்பு –தங்குமிடம்-உணவு அனைத்தும் இலவசம்


இலவசம் BE படிப்பு –தங்குமிடம்-உணவு அனைத்தும் இலவசம் 
இலவசம் ஆனால் உண்மை
இன்று 28.05.2011 ஜெயா தொலைக்காட்சியில் விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சி பார்த்துக்  கொண்டிருக்கும் போது நிறைவேறிய இலவச அறிவிப்பு
கல்லூரியில் இலவசமாக தேர்வாக
1)      80% சதவிகித   cut of Mark  பெற்றிருக்கவேண்டும்
2)      தாய் தந்தையர் இருவரின் வருமானமும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கவேண்டும் எத் தொழில் சார்ந்தவரும் விண்ணப்பிக்கலாம்
3)      அனைத்து   ஜாதியை சார்ந்தவரும் விண்ணப்பிக்கலாம ஜாதி ஒரு தடை அல்ல
4)      ஷீரடி சாய் இன்ஜினியரிங் கல்லூரி சென்னையிலும் ஹோசூரிலும் இயங்கி வருகிறது ஏழை மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதனால் திரு. விசு மக்கள் அரங்க நிகழ்ச்சிக்கு மேற்கண்ட கல்லூரியின் சென்னை கல்லூரியில் சேருவதற்கு ஐந்து இடமும் ஹோசூரில்  ஐந்து இடமும் ஒதுக்கி உள்ளனர்
5)      கல்லூரியில் படிக்கும் படிப்பு செலவு தங்குவதற்கான செலவு உணவு க்கான செலவு அனைத்தும் கல்லூரி நிர்வாகமே ஏற்ப்பதால் கவலை இன்றி சேரலாம்
6)      மேற்க்கண்ட சேர்க்கை மக்கள் அரங்க சிபாரிசிலும் கல்லூரி நிர்வாக அனுமதியின் பேரிலும் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு   நடை முறை  கடை பிடிக்கப்படும்
7)      மற்ற விபரங்களுக்கு ஜெயா தொலக்காட்சி மக்கள் அரங்க நிகழ்ச்சியை பார்க்கவும் ஞாயிறு காலையிலும் மறு ஒளிபரப்பு சனிக்கிகிழமை மாலையிலும் பார்க்கலாம்
8)      இது ஒரு தகவலுக்காக வெளியிடப்படும் அறிவிப்பே தவிர ஜெயா தொலைக்காட்சி- மக்கள் அரங்கம்-  ஷீரடி சாய் இன்ஜினியரிங் கல்லூரி  முதலியவற்றுக்கும் எந்த தொடர்புமில்லை
9)      பத்து மாணவ மாணவிகளும் கல்லூரியில் தேர்வாகி  படிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
10)   விண்ணப்பம் தெளிவான கையெழுத்துடன்
சுய தகவல் படிவம்
மதிப்பெண் பட்டியல் – சான்றளித்தவர் கையோப்பமுடன்
தாயார் தகப்பானார் வருமான சான்றிதழ்
11)   அனுப்ப வேண்டிய முகவரி
விசுவின் மக்கள் அரங்கம்
தபால் பெட்டி எண்-6900
சென்னை -40     
கைபேசி 9677760909
வாழ்த்துக்களுடன்இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த அரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு ஏழை மாணவனின் இன்ஜினியரிங் படிக்க வேன்ன்டும் என்ற அவாவின் வெளிப்பாடும் ஆசைப்பட்டதை அடைந்ததையும் பேசியது அருமையாக இருந்தது இந்த உந்து சக்தி இவரைப் போல் பலரையும் உருவாக்கும் எண்பது உறுதி எந்த கல்லூரிக்கு சேரவேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதே கல்லூரி தன்னை மதிப்பெண் பத்தாது என்று திருப்பி அனுப்பியும் படிக்க வேண்டும்  என்ற ஆசையினால் மாமாவின் சிபாரிசின் மீது சேர்ந்து கல்லூரி ஆரம்பிக்கப் பட்ட நாளிலிருந்து அது வறை யாரும் எடுக்காத மதிப்பெண்களை பெற்று தனித்துவம் பெற்று தன்னுடைய பெயர் கல்லூரி வளாகத்தில் அலங்கரிப்பதை கூறிய போது மிகவும் பெருமிதமாக அவர் உணர்ந்தாரோ என்னவோ நம்மையும் ஆழ்த்திவிட்டார் படப்பிடிப்புக் குழுவினரும் அனைத்து நிகழ்வுகளையும் காட்டி அசத்தி விட்டனர் தாயார் விவசாய கூலி தகப்பனார் ரொட்டிக் கடையில் கூலி வேலை பார்ப்பவர் குடும்ப சிலவிற்கே பற்றாது என்ற நிலைமை தம்பியும் படிக்க வேண்டிய  சூழ்நிலை  வறுமைக் கோட்டின் கீழ் இருந்தும் படிக்க வேண்டும் என்ற ஆவல் அப்துல் கலாம் கூறிய நவீன இளைஞன் நிச்சயமாக இவரும் இவரைப்போன்றவர்களும் தான்.  

   www.salemscooby.blogspot.com