Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

திங்கள், 2 நவம்பர், 2009

கணேசன் உஷா தம்பதிகள் வேநிதானம் செய்யும் காட்சி

வேணீதானம்: (கூந்தல் தானம்)

சுமங்கலி ஸ்திரீகள் வேணீ தானம் செய்கிறார்கள். சுமங்கலி ஸ்திரீகள் முதலில் தங்கள் கணவனுடன் திரிவேணீ கரையில் இதற்காகச் சங்கல்பம் செய்துகொண்ட உடன், மஞ்சள் பூசிக்கொண்டு ஸ்நானம் செய்தபின், கரையில் வந்து கணவனிடம் கூந்தல் தானம் செய்ய அனுமதி பெறுகிறாள். மனைவி கணவனை மாதவனாகக் கருதி வாழ்நாளில் தான் செய்யும் கடமைகளில் தான் செய்திருக்கக் கூடிய சிறு தவறுகளுக்கு மன்னிக்குமாறு வேண்டுகிறாள். இந்த இனிய கருத்துப் பரிமாரலில் தாம்பத்யம் புதிய பலத்தை பெறுகிறது. ஸ்நானம் செய்யும் சமயம், முடியைக் கட்டி முடித்து இருக்க வேண்டும்..வேறு எந்த ஷேத்திரதிலும் பெண்கள் தங்கள் கேசத்தை மழிப்பதோ கழிப்பதோ இல்லை த்ரிவேநிக்கு மட்டும் விதி விலக்கு.

கணவன் வேணீ தானத்திற்கான அனுமதி கொடுத்து, முடியின் நுனியில் மங்கள திரவியங்களைக் கட்டி, கணவன் மனைவிக்கு மூன்று கால் எடுத்துப் பின்னிவிட வேண்டும் பிறகு த்ரிவேநியையும் கத்திரிகோல்யும் பூஜிக்க வேண்டும் கத்திரிகோல் கூட ஒரு வகையில் த்ரிவேநிதான். கத்திரிகோல்ளின் இரு பகுதிகளாக கங்கையும் யமுனையும் இருக்கிறார்கள் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் ஆணி தான் சரஸ்வதி. முடியின் நுனியைக் கத்திரிக்கோலால் வெட்டி எடுத்து மனைவியின் கையில் கொடுக்கிறான். மனைவி இதை வழி பாட்டுக்குப்பின் பின்னலை முறத்தில் வைத்து வேநிதானம் செய்யவேண்டும். ஒரு சிறிய முறத்தில் சீப்பு, கண்ணாடி, குங்குமம், மஞ்சள், அரிசி, வெற்றிலை, பாக்கு, பழம் ரவிக்கை துணி, தட்சினை இவற்றை வைத்து மேலே ஒரு சிறிய முறத்தால் மூடி தானம் செய்து விட்டு தம்பதியர் இருவரும் நீராடி வரவேண்டும். திரிவேணிக்கு அர்ப்பணிக்கப்படும் அந்தக் கூந்தல் நீரில் மிதப்பதில்லை விர்ரென்று நீருக்குள் மூழ்கி மறைந்து விடுகிறது.


பிரயாகை (அலகாபாத்) ஷேத்திர மகிமை

பிரயாகை (அலகாபாத்) ஷேத்திர மகிமை

பிரயாகையை ஸ்தாபித்து ஆரியர்கள் என அழைக்கப்படும் பிராமணர்கள் வாழ்ந்த பகுதி பிரயாகை. "prayagasya praveshshu papam Nashwati Tatkshanam." ப்ரயகச்ய பிரவேஷ்ஷு பாபம் நஷ்வடி த்க்ஸ்ஹநம் .".

சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்த அந்தணர்ககளின் சந்ததியினர், தங்களது மூதாதையர்களின் கொள்கைகளை பரப்புவதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வாழ்கிறார்கள். ஒன்பதனாயிரம் ஆண்டுகளாக பிராமணர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருவதை சரஸ்வதி நதி உறுதிப்படுத்துகிறது. வேத காலத்தில் கங்கை யமுனைக்கு மேற்க்கே ஓடிய நதி சரஸ்வதி நதி தற்போது வரண்டுள்ளது ஆயினும் 4000 ஆண்டுகளுக்கு முன்பு கம்பீரமாக ஓடிய நதி சரஸ்வதி நதி.

பிரயாகையிலிருந்து காசி 125 km தொலைவில் உள்ளது

முதலில் பிரயாகை அடுத்து காசி மூன்றாவதாக கயாவிற்க்கு வந்து சிராத்தம் முடிக்கவேண்டும் காரணம் என்னவென்றால் இல்லங்களில் மூதாதையருக்கு திதி கொடுக்கும்போது அட்சய வடம் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது.அகரம் மத்யம் மூலம் என்றும் கூறப்படுகிறது. அட்சயவடம் என்ற ஆலமரம் கயாவில் காணப்படுறது. இந்த ஆலமரத்தின் மூல வேர் பிரயாகையில் இருக்கிறது. நடுப்பாகம் மத்யம் காசியில் உள்ளது. நுனிப்பாகம் அகரம் கயாவில் உள்ளது. இந்த மூன்று ஸ்தலங்களையும் இந்த ஆலமரம் இணைத்து வைக்கிறது.

பெரு வேள்வி கண்ட பூமியே பிரயாகை, தீர்த்த ஸ்தலத்தில், முக்கியமாக உபவாசம், ஜபம், தானம், பூஜை, பாராயணம் முதலியவை அனுஷ்டிக்கப்படுகின்றன.

கங்கை, யமுனை, ஸரஸ்வதீ ஆகிய மூன்று புனித நதிகளின் த்ரிவேணீ சங்கமத்தில் ஸ்நானம் செய்கிறவர்கள் பிரஹ்ம பதத்தை அடைகின்றனர்.